Monday, July 11, 2011

உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை 12ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது!

Monday, July 11, 2011
65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை 12ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இத்தேர்தலில் 60 ஆயிரத்து 643 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்கும் பணியில் நூறு தொண்டர்களை ஈடுபடுத்தவிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். தபால் மூல வாக்களிப்பை அமைதியாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பி.கே. காமினி நவரட்ண கூறினார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் நவரட்ன மேலும் கூறுகையில், ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகள் அடங்கலான 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இதற்கென தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 28 பொலிஸ் பிரிவுகளிலுள்ள 108 பொலிஸ் நிலையப் பகுதிகளிலேயே இத்தேர்தல் நடைபெறுகின்றது.

சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது!

Monday, July 11, 2011
இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும்

Followers

Blog Archive