Monday, November 22, 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு.

Monday, November 22, 2010
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.

இதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011

Monday, November 22, 2010
2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி பதவியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.

நாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்களாகும் மற்றும் அபிவிருத்தியின் பெறுபேறுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும் இம்முறை வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாண சபை வீதி மற்றும் கிராமப்புர பாதைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் அதேவேளை, சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அதிக பெறுபேறுகளை பெற்றுத் தரும். அவர்களை ஊக்குவிக்கும் யோசனைகளும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

எமது நாட்டின் வரி முறையை இலகுபடுத்தும் வகையிலான முறையொன்று வரவு - செலவுத் திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகள் மேம்படுத்தப் படுவதுடன் கடற் படை, விமானப் படை ஆகியவற்றை பலப்படுத்தி ஆசியாவின் உன்னதமான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை ஸ்திரப்படுத்தும் யோசனைகளும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறும் அரச வருமானம், செலவு மற்றும் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதேபோன்று வைத்திருப்பதில் அரசாங்கம் இம்முறை அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டில் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை தேசிய வளர்ச்சி விகிதத்தில் நூற்றுக்கு 9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு 7 சதவீதம் என்ற மட்டத்தில் பேணுவதற்கே எதிர்பார்க் கப்பட்டது. அதிக நிதியை நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

இம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 7 சத வீத மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன், உள்ளூர் மொத்த உற்பத்தியில் நூற்றுக்கு 80 என்ற மட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

2005 இல் நாட்டின் கடன் உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதத்தில் நூற்றுக்கு 105 சதவீதமாக இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு 84 சதவீதம் வரை குறைந்தது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் யோசனைகளை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அவற்றை செயலுருப்படுத்தும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஏற்ப 2011ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவு 1080.9 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவு 458.1 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.

Followers

Blog Archive