Wednesday, September 7, 2011

டெல்லி தாக்குதலுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்!

Wednesday, September 07, 2011
டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் இதுவரையில் 10 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளதோடு 60 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்கள் அமுல்ப் படுத்தப்படும் - நிமால் சிறிபால!

Wednesday, September 07, 2011
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்களை அமுல்ப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது இதனால் சில சட்டங்களை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசாங்கம் புதிதாக சட்டங்களை உருவாக்கும்.

கிறீஸ் பூதங்கள் என்பது, விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவும் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களை தடுத்து நிறுவத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரமாகும். மக்களின் அச்சத்தை போக்க காவற்துறையினரும், முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் சட்ட ரீதியான உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கவும்:ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 07, 2011
அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் பாடசாலையைச் சேர்ந்த பத்து வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறாத வண்ணம் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரண.

அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் ஜெலிஜ்ஜவல பாடசாலையைச் சேர்ந்த 10 வயதே நிரம்பிய சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு மேலும் விளக்குகையில், குறித்த பாடசாலையின் பரீட்சை மண்டபத்தை துப்புரவு செய்ய வருகை தந்த 10 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற் கொண்டமையானது துரதிஷ்டவசமானது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்ததாக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததையடுத்து அது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு பாரபட்சமற்ற வகையில் அதிகபட்சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதன்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றும் என்றார்.

ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்!

Wednesday, September 7, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, புழல் சிறையில் இருந்து இன்று காலை வேலூர் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கருதி கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால், புழல் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில்தான் உள்ளனர். அவர்களுக்கு வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, தங்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து மூவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற, 8 வாரத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

அவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த நளினி, இன்று காலை திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காலை 8 மணியளவில் நளினியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். இதனால், காலை முதல் புழல் சிறை பரபரப்பாக காணப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நளினியை வேலூருக்கு திடீரென மாற்றியதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

Followers

Blog Archive