Wednesday, May 26, 2010

கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Wednesday, 26 May 2010
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா மிக கோலாகலமாக நேற்று இடம்பெற்றது. சுமார் முப்பதாயிரத்துக்க்கும் அதிகமான பக்தர்கள் ஆலயததை தரிசிக்க வருகை தந்தார்கள்.
கடந்த காலங்களில் வன்னியில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக ஆலயத்தில் பொங்கல் விழா இடம் பெறாமலேயே இருந்து வந்தது.இன்றைய யுத்தம் அற்ற சூழலில் ஆலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் , வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து ஏனைய இடங்களில் வாழ்பவாகள்,யாழ்ப்பாணம் கிளிநோச்சி வவுனியா மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மககள் வந்து பொங்கிப் படைத்தனர்.
காவடிகள் எடுத்தனர். நேர்த்திக்கடன்களை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றினர். ஆலய வாசலில் ஆயிரக்கணகான பானைகளில் மககள் அம்மனுக்கு பொங்கி படைத்தனர். அதே நேரம் ஆலய சுற்றாடலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் .

ஜூலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகும்.

Wednesday, 26 May 2010
எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதி அளவில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான தொண்டு நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணி பூர்த்தியானதன் பின்னர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கட்டண மோசடி .

Wednesday, 26 May 2010
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான கட்டளைகள் இன்றியும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முன் அனுமதி இன்றியும் பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்குக் கிடைக்கும்தொழில் கட்டளைகள் தொடர்பாகப் பணியகத்துக்குத் தகவல் சமர்பிக்க வேண்டும்.
தூதுவராலய மட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படுமென வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
சில முகவர் நிலையங்கள் தூரப் பிரதேச இளைஞர் யுவதிகளிடம் தொழில் கட்டளைகள் இன்றிப் பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியகத்துக்குக் கிடைக்கும் சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுமென கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகின்றது என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் தமது பணியகத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு அமைய சட்டங்களை மீறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடியுமெனப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் 26 புதிய தபாலகங்கள் தபால் மா அதிபர் தகவல்,

Wednesday, 26 May 2010
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தபால் திணைக்களம் புதிதாக 26 தபால் நிலையங்களை வடக்கு கிழக்கில் நிர்மாணித்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் புதிதாக 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதாக தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். இவை நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படுவதாகவூம் இவற்றுக்கு தொலைபேசி மற்றும் கணணி; வசதிகள் என்பனவூம் வழங்கப்படவூள்ளன.
யூத்த சு+ழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தபால் நிலையங்கள் சேதமடைந்தன. யூத்தம் முடிவடைந்த பின்னர் தற்காலிக இடங்களில் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டார்

வெசாக் பண்டிகை விஷேட ரயில் சேவை! மூன்று நாட்களுக்கு தொடரும்,

Wednesday, 26 May 2010
வெசாக் பண்டிகையை முன்னிட்டு பக்தா;களுக்கு அநுராதபுரம் செல்வதற்காக விஷேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (26) நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் பிற்பகல் 1.25 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரத்துக்கு விஷேட ரயில் சேவை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளா; விஜய சமரசிங்ஹ தொpவித்தார்
இவ்வாறு புறப்பட்டுச் செல்லும் ரயில் மாலை 6.02க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
அதேபோன்று குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் காலை 8.45 க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.40 அளவில் கொழும்பு கொட்டையை வந்தடையூம் என அவா; மேலும் தொpவித்தார்

Followers

Blog Archive