Wednesday, May 26, 2010

வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கட்டண மோசடி .

Wednesday, 26 May 2010
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான கட்டளைகள் இன்றியும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முன் அனுமதி இன்றியும் பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்குக் கிடைக்கும்தொழில் கட்டளைகள் தொடர்பாகப் பணியகத்துக்குத் தகவல் சமர்பிக்க வேண்டும்.
தூதுவராலய மட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படுமென வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
சில முகவர் நிலையங்கள் தூரப் பிரதேச இளைஞர் யுவதிகளிடம் தொழில் கட்டளைகள் இன்றிப் பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியகத்துக்குக் கிடைக்கும் சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுமென கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகின்றது என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் தமது பணியகத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு அமைய சட்டங்களை மீறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடியுமெனப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive