Monday, November 8, 2010

கங்காராம விகாரை சமய வைபவங்களில்;;;; ஜனாதிபதி!

Monday, November 8, 2010
ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்டட தான சமய வைபவம் நடைபெற்றது.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து இன்று அதிகாலை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை நோக்கி பெரஹர ஊh;வலம் நடைபெற்றது. நேற்று முழு இரவூம் பிரித் பாராயணம் நடைபெற்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கா; வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரோவூம் இந்த வைபவத்தில் கலந்துகொண்டாh;.

ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி வண. கலபொட ஞானதிஸ்ஸ தேரர் இங்கு உரை நிகழ்;த்துகையில்:

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது அமைதியான சூழலில் தத்தமது கடமைகளில் நிம்;மதியாக ஈடுபடக்கூடிய சந்தாப்பம் வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும் என்றாh;.

பொன்சேகா விடுதலைகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது முறுகல்!

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் வைத்துப் பொலிசார் சிலர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலர் இந்தச் சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் 'ஜெனரலுக்காக இராணுவத்தினர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத சில நபர்களால் குழப்பநிலை ஏற்பட்டது.

வெலிக்கடைச் சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை ஆரம்பம்.

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் கெனத் பெர்னண்டோ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் டி சில்வா குறிப்பிட்டார்.

மோதலுக்கான காரணம் தொடர்பாக இந்தக் குழுவினால் பல பிரிவுகளினூடாக ஆராயப்பட்டு அறிக்கையொன்று பெறப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை இந்த மோதல் தொடர்பாக இரகசிய பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் குழு நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை மோதலில் காயமடைந்த 14 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Followers

Blog Archive