Friday, June 11, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும்,

Friday, 11 June 2010
சபாநாயகர்.சமல்.ராஜபக்ஸவினால்.கோரிக்கைக்.கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

சிறுவர் இல்லச் சிறுமிகள் விபசாரத்தில்! பொலிஸ் விசாரணை!!

Friday, 11 June 2010
சிலாபம் நகரை அண்மித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாகப் பொலிசார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.

நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பில் இச்சிறுவர் இல்லம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
14 முதல் 16 வயது வரையிலான சிறுமியரே இவ்வாறு விபசார நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வெளியேறிய இவர்கள் வீடொன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சிறுமிகளில் இருவர் சிலாபத்திலும் ஒருவர் காலியிலும், நான்காமவர் நவகத்தேகமவிலும் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை அழைத்துச் சென்ற நீர்கொழும்பு, கதிரான பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கிடைத்த தகவலொன்றுக்கமைய பொலிசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

புலிகள் சார்பு வலையமைப்புக்கள் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சி!

Friday, 11 June 2010
புணானையில் படைவீரர் மத்தியில் பாதுகாப்பு செயலர்

சர்வதேச மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற புலிகள் சார்பு பயங்கரவாத வலையமைப்புக்கள் இலங்கையில் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புலிகள் சார்பு சர்வதேச வலையமைப்புக்களின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை புலனாய்வூத் துறையினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர்இ இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் கவன யீனமாக இருக்க முடியாதென்றும் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைத்து அதனை மேலும் வளப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

வெலிகந்தைஇ புணானையிலுள்ள இராணுவத்தின் 23வது படையணியின் தலைமையகத்துக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த நான்காயிரத்து க்கு மேற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு புலி களின் சர்வதேச மட்ட நிதித் தொடர்புகள்இ ஆயூதத் தொடர்புகள் போன்ற பாரிய வலையமைப்புக்கள் உள்நாட்டு புலனாய்வூத் துறையின ராலும் வெளிநாடுகளின் ஒத்துழைப் புடனும் முடக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒரு சில வலையமைப் புக்கள் தொடர்ந்தும் சர்வதேசமட்ட த்தில் செயற்பட்டு வருவதாகவூம் தெரி வித்தாh;. அதன் அழுத்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவ தில்லை. ஒரு யூகத்தைக் கடந்து புதியதொரு யூகத்தில் நாம் காலடி வைத்துள்ளோம்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நாம் தவற விடக்கூடாது. அப்பாவி பொதுமக் களைப் பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்ற வெற்றியை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆரம்பக் கட்ட த்தை எமது எதிர்கால படிப்பினை யாக கொள்ளவேண்டும். அப்போது தான் எதிர்காலங்களிலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாது செயற்பட முடியூம்.

இவ்வாறான பயங்கரவாதத்தின் அடித்தளம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் கிளம்புவதற்கு இடமளிக்கக் கூடா தென்றும் இதற்கமைவாக நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத் தப்பட்டு அங்குள்ள பாடசாலைக ளிலும் கட்டடங்களி லும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பதிலாக வடக்குஇ கிழக்கில் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர முகாம்கள் அமைத்து சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படு மென்றும் தெரிவித்தார்

சீன உப பிரதமர் தலைமையில் உயர் குழு இலங்கை வருகை!

Friday, 11 June 2010
சீன உப பிரதமர் சியாங்க் டிஜியாங்க் தலைமையில் கொழும்புக்கு வருகை தந்துள்ள உயர் மட்டக் குழு பிரதமர் தி.மு. ஜயரத்னவை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றது.
இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

சீன உப பிரதமர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவூ கொழும்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை பதில் வெளி விவகார அமைச்சர் கீத்தாஞ்ன குணவர்தன கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

Followers

Blog Archive