Thursday, August 25, 2011

அவசரகால சட்டம் நீக்கம்!

Thursday, August 25, 2011
இலங்கையில் தற்போது நடைமுறையில் அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொள்வார் என இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புமற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காத விடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலைகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.

இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அவசரக்காலச்சட்டத்தை நீக்கவுள்ளதாகவும், இதனை இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவிக்ககூடும் எனவும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள

வடக்கில் 40 ஆயிரம் மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை!

Thursday, August 25, 2011
வடக்கில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள்; இதுவரை நிரந்தர வீடுகள் இல்லாமல் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுகிறது என சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் மஹேஸ் ஜோனி தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள் தாமே அமைத்து கொண்ட கூடராங்களில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் தற்போது வட பகுதி மக்களை மறந்துள்ளன. இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணிகளை அரசாங்கத்தினால் மாத்திரமே தனியாக செய்ய முடியாது எனவும் மஹேஸ் குறிப்பிட்டுள்ளார்.

Followers

Blog Archive