Thursday, August 25, 2011

வடக்கில் 40 ஆயிரம் மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை!

Thursday, August 25, 2011
வடக்கில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள்; இதுவரை நிரந்தர வீடுகள் இல்லாமல் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுகிறது என சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் மஹேஸ் ஜோனி தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள் தாமே அமைத்து கொண்ட கூடராங்களில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் தற்போது வட பகுதி மக்களை மறந்துள்ளன. இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணிகளை அரசாங்கத்தினால் மாத்திரமே தனியாக செய்ய முடியாது எனவும் மஹேஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive