Tuesday, April 27, 2010

வடக்கு கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி!

Tuesday, 27 April 2010
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவூம் இதன் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியூம் என்று எதிh;பாh;ப்பதாகவூம் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசு+ரிய தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி திறப்பு விழாவில் உரையாற்றிய போதே பொலிஸ் மா அதிபா; மேற்கண்டவாறு கூறினாh;. அவா; தொடா;ந்து கூறுகையில்.
யாழ்ப்பாணம் வவூனியா மன்னார் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவூள்ளது.
இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் பொலிஸாரால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முiறியல் வழங்க முடியூம்.
மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.
பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உலக வங்கி 100 மில்லியன் கடனுதவி

Tuesday, 27 April 2010
வடக்கின் புனரமைப்பு பணிகளுக்காக உலக வங்கி 100 மில்லியன் ரூபாவினை கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. தௌ்ளிப்பழை மற்றும் உடுவில் பிரதேசங்களில் 3000 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வடிகாலமைப்பு திட்டங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளா கே.விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.

Followers

Blog Archive