Tuesday, June 15, 2010

தியாகிகள் தினம்

மொழியூ+டான அறிவூ வளர்ச்சி இனங்களுக்கிடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும்!

Tuesday, 15 June 2010

மக்களின் மொழியூ+டான அறிவூ வளர்ச்சியானது இனங்களுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அதன் மூலம் அமைதியான அபிவிருத்தி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பவூம் முடியூம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சாகித்திய நூல்கள் நேற்று ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டன. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களைக் கையேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாh;. அவா; தொடா;ந்து கூறுகையில்.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்களின் வரவானது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையூம் நல்லுறவையூம் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமையூம் என மேலும் தொpவித்தாh;;.
இந்நிகழ்வின் போது தமிழ் சிங்கள மொழி மூலமான 17 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.(எஸ்.டி.எம்.ஐ.10.00)

கொழும்பில் தற்காலிக போக்குவரத்துத் திட்டம்.

Tuesday, 15 June 2010

இராணுவ வெற்றியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிவகுப்பு ஒத்திகைக்காக தற்காலிக போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு காலிமுகத் திடல் சந்தியிலிருந்து செரமிக் சந்தி வரையிலான பகுதி இக்காலப் பகுதியில் போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்படவுள்ளதெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பாகக் காலி வீதியூடாகக் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சகல பார ஊர்திகளும் கொள்ளுப்பிட்டிச் சந்தியால் திரும்பிப் பித்தளைச் சந்தியால் கொழும்பு நோக்கிப் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தின் வலப்புறமாக மாக்கான் மாக்கார் மாவத்தையூடாகத் திரும்பிக் கொம்பனித் தெரு ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கமுடியும்.

யாழ், கிளிநொச்சி வாக்காளர் பதிவுகள் திருப்தியில்லை.

Tuesday, 15 June 2010

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை என குறித்த தேர்தல் கண்காணிப்பு குழு குற்றம் சுமத்தியுள்ளது.

கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமே வாக்காளர்களை பதியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் வீடு வீடாக செல்லவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக ஒரே கிராமத்தில் சிலருக்கு வாக்குரிமை இல்லாமல் போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடத்தப்படுவதற்கும் வடக்கில் வாக்காளர் நடத்தப்படும் விதத்திற்கும் வித்தியாசம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் வாக்காளர் பதிவினை உரிய தரத்தில் பேணுவதற்கு அரசாங்கம்

எகிப்திலிருந்து உயர்மட்டக் குழு இலங்கை வருகை,

Tuesday, 15 June 2010

எகிப்து நாட்டு உதவி வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் அமீன் பத்தல்லாஹ் தலைமையிலான உயர்மட்ட குழு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்தது.

இக்குழுவினர் இன்று 15ம் திகதி பிரதி வெளிவிவகார அமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தனவுடனும், நாளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோருடன் சந்திப் புக்களை நடத்தவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் கூறினார்.

Followers

Blog Archive