Tuesday, June 15, 2010

யாழ், கிளிநொச்சி வாக்காளர் பதிவுகள் திருப்தியில்லை.

Tuesday, 15 June 2010

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை என குறித்த தேர்தல் கண்காணிப்பு குழு குற்றம் சுமத்தியுள்ளது.

கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமே வாக்காளர்களை பதியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் வீடு வீடாக செல்லவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக ஒரே கிராமத்தில் சிலருக்கு வாக்குரிமை இல்லாமல் போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடத்தப்படுவதற்கும் வடக்கில் வாக்காளர் நடத்தப்படும் விதத்திற்கும் வித்தியாசம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் வாக்காளர் பதிவினை உரிய தரத்தில் பேணுவதற்கு அரசாங்கம்

No comments:

Post a Comment

Followers

Blog Archive