Sunday, January 9, 2011

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்க சர்வதேசம் பகீரதபிரயத்தனம்.

Sunday, January 9, 2011
தம்மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு சர்வதேசம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை அபிவி ருத்தியில் கட்டியெ ழுப்பும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப் பவர்கள் தம்மை ஓர் ஏகாதிபத்தியவாதியாக வெளிநாடுகளுக்குக் காட்ட விளைகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவைகளை வழங்கியமைக்காக 17 பிரதேச செயலகங்கள் மற்றும் மூன்று மாவட்டச் செயலகங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சம்பந் தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலா ளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கை யில் :-

தற்போது நாட்டில் பலமுள்ள அரசாங்கம் உள்ளது. தேர்தலில் எனக்கெதிராக வாக்களித்தவர்களும் எமது செயற்பாடுகளைக் களைந்து எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

இந்த நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு சர்வதேச சமூகம் பகீரத பிரயத்தனம் செய்கிறது. விக்கிலீக்ஸ் போன்றவற்றினை உபயோகப்படுத்தி இச்சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்குச் சில சக்திகள் துணை போகின்றன.

நாம் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் கட்டியெழுப்பி வருகிறோம். ஜீ. எஸ். பி. வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் ஆடைத் தொழில் துறை பெரும் வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் தேவைப்படு கின்றன.

ஜீ. எஸ். பி. சலுகைக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் சம்மட்டியால் அறைகிறார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம்; அரசுடன் இணைவதில் ஆர்வம்.

Sunday, January 9, 2011
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதான கட்சிகள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ள நிலையில் சிறிய கட்சிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் செல்வாக்குள்ளவர்களை நோக்கி வலைவிரித்துள்ளன. இதில் சிறுபான்மைத் தமிழ் கட்சிகள் தமது கொள்கைக்குச் சாதகமானவர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா என்பதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்காமல் இழுபறி நிலையில் உள்ளன.

தமிழ்க் கட்சிகள் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதற்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆளுந் தரப்புடன் இணைந்து போட்டி யிடுவதற்கும் பெரும்பாலான கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மாகாண சபை நிர்வாகம் இவை அனைத்து விடயங்களையும் சிந்தித்து சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து போட்டியிடு வதெனத் தீர்மானித்துள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடல்.

Sunday, January 9, 2011
சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கொழும்பில் கடந்த வியாழன் முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் முதன்முதலாக நடைபெறும் இம்மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கோலாகலமாக கண்கவரும் வண்ணமும், ஆழமான தமிழாற்றல் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

இம்மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து நம்நாட்டு ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை எம்மவரை நிச்சயம் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

இயந்திரமயமாகிவரும் உலகில் இலக்கியத்திற்கும் இடமளித்து அதனை எழுத்து வடிவில் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாத்து ஆவணப்படுத்த உதவி புரியும் இந்த மாநாட்டுக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த அவர்கள் தீர்மானித்தமை எமக்குப் பெருமையளிக்கிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய முக்கியமான மாநாடு இங்கு நடைபெறுவது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை.

அதிலும் இதுபோன்ற மாநாடுகள் யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியில் நடைபெற்றால் அந்தப் பலன் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும். யுத்த வடுக்கள் தற்போதுதான் அப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம்பெறும்போது அது நிச்சயம் கிளிநொச்சியில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இத்தகைய சிறந்த மாநாடுகள் எங்கு நடந்தாலும் அவற்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உரியவாறு நிறைவேற்றப்பட வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் உதித்த செம்மொழிகளில் ஒன்றான எமது தாய்மொழியாம் தமிழ் மொழியை வளர்க்கும் எவரையும் நாம் எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். நாமும் எமது பங்களிப்பை நல்கி அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Followers

Blog Archive