Sunday, January 9, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம்; அரசுடன் இணைவதில் ஆர்வம்.

Sunday, January 9, 2011
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதான கட்சிகள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ள நிலையில் சிறிய கட்சிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் செல்வாக்குள்ளவர்களை நோக்கி வலைவிரித்துள்ளன. இதில் சிறுபான்மைத் தமிழ் கட்சிகள் தமது கொள்கைக்குச் சாதகமானவர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா என்பதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்காமல் இழுபறி நிலையில் உள்ளன.

தமிழ்க் கட்சிகள் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதற்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆளுந் தரப்புடன் இணைந்து போட்டி யிடுவதற்கும் பெரும்பாலான கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மாகாண சபை நிர்வாகம் இவை அனைத்து விடயங்களையும் சிந்தித்து சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து போட்டியிடு வதெனத் தீர்மானித்துள்ளன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive