Wednesday, November 9, 2011

வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல் இடைநிறுத்தம்!

Wednesday, November 9, 2011
காணி திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் காணித் திணைக்களம் பகிரங்க அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.எல்.ரஞ்ஜித் சில்வா இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்தார்.

இதன்பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் நீதிமன்றம் இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மாலைத்தீவில் அடிக்கல் நாட்டி வைப்பு!

Wednesday, November 9, 2011
17வது சார்க் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இன்றைய தினம் அங்கு அமைக்கப்படவுள்ள பாதை ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

ஜனாதிபதி செய்தி ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவின் அட்தா நகரில் இந்த பாதை நிர்மானிக்கப்படவுள்ளது.

இது இலங்கை அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது.

4.5 கிலோமீற்றர் நீளமான இந்த பாதைக்கு, 10 மில்லியன் டொலர்களை இலங்கை வழங்கியுள்ளது.

Followers

Blog Archive