Wednesday, November 9, 2011

வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல் இடைநிறுத்தம்!

Wednesday, November 9, 2011
காணி திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் காணித் திணைக்களம் பகிரங்க அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.எல்.ரஞ்ஜித் சில்வா இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்தார்.

இதன்பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் நீதிமன்றம் இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive