Monday, September 20, 2010

அவுஸ் திரேலியாவில் இலங்கையருக்கு தண்டனை.

Tuesday, 21 September 2010
இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்தரை வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இவர், இலங்கையில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவுஸ்தி ரேலியாவுக்கு ஆட்களை கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்

பத்மேந்திரா புலேந்திரன் என்ற இவர், கசிவு ஏற்பட்ட கப்பல் ஒன்றில் சுமார் 200 அரசியல் தஞ்சம் கோருபவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றிருந்தார்.

இவர் இந்தோனேசியாவில் முகவராக செயற்பட்டதுடன் இந்தப்படகின் மூலம் இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான்,அகதிகளை சட்டவிரோத அழைத்துச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

அத்துடன் இவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது

பொதுமக்களை சட்டவிரோதமாக அழைத்துச்செல்பவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கமுடியும் என நீதிபதி, ரொபைன் டுப்மன் தெரிவித்துள்ளார்

அத்துடன் குற்றவாளி சட்டவிரோத அகதிகளில் இருந்து பெற்றதாக கருதப்படும் 40 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்;தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு இராணுவத்தினரின் உதவி.

Tuesday, 21 September 2010
மன்னார் மாந்தை மேற்க்குப் பகுதியான பாலயடி புதுக்குளம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம், தச்சுவேலை மேசன் மற்றும் கூலித் தொழில்களாகும்.

இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்த வேன்டிய தேவைகளை அறிந்து கொன்ட இராணுவத்தின் 543வது படைத்தளத்தின் சிவில் இணைப்பதிகாரி பாலயடி புதுக்குளம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்ட்ட 78 குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் சுய தொழில்களுக்குததேவையான உபகரணங்களையும் மின்பிறப்பாக்கிகளும் கடந்த 17 ஆம் திகதி வழங்கப்படது. மேலும் தேசிய சேமிப்பு வங்கியில் பணவைப்புச் செய்யப்பட்டு புத்தகங்களும் கையளிக்கப்ட்டது.

பின்வரும் உபகரணங்கள் 78 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும்அதற்க்குத் தேவையான உபகரனங்கள் 49
மின்பிறப்ப்பாக்கி 02
தையல் இயந்திரம் 01
துவிச்சக்கர வண்டி 02
மேசன் உபகரனங்கள் 03
தச்சு வேலை 03
கம்பி றோல்கள் 40

இப்பொருட்கள் வழங்கி வைக்கும் வைபவத்துக்கு 54 படைத்தளத் தளபதி பிரிகேடியர் மைத்திரி டயஸ்,542 பிரிகேட்டின் தளபதி கேனல் அருன முகாந்திரம் மற்றும் சிவில் இணைப்பதிகாரி லெப்டினன் கேனல் நலிந்த மகாவிதான ஆகியோரும் கலந்து கொன்டனர்

வவூனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் நிர்மாணிக்கும்!

Monday, 20 September 2010
வவூனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவூனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவூனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவூள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவூம் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவூனியா மாவட்டத்தில் குடியேறியூள்ள தெரிவூ செய்யப்பட்ட 2இ900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியூதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவூம் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவூ செய்யூம் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவூகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவூ செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவூம் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை 46 தொடர்ந்தும் தடுத்துவைப்பு.

Monday, 20 September 2010
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர்.

மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியூள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 மீனவர்கள் 13 படகுகளுடன் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Followers

Blog Archive