Monday, September 20, 2010

அவுஸ் திரேலியாவில் இலங்கையருக்கு தண்டனை.

Tuesday, 21 September 2010
இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்தரை வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இவர், இலங்கையில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவுஸ்தி ரேலியாவுக்கு ஆட்களை கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்

பத்மேந்திரா புலேந்திரன் என்ற இவர், கசிவு ஏற்பட்ட கப்பல் ஒன்றில் சுமார் 200 அரசியல் தஞ்சம் கோருபவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றிருந்தார்.

இவர் இந்தோனேசியாவில் முகவராக செயற்பட்டதுடன் இந்தப்படகின் மூலம் இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான்,அகதிகளை சட்டவிரோத அழைத்துச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

அத்துடன் இவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது

பொதுமக்களை சட்டவிரோதமாக அழைத்துச்செல்பவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கமுடியும் என நீதிபதி, ரொபைன் டுப்மன் தெரிவித்துள்ளார்

அத்துடன் குற்றவாளி சட்டவிரோத அகதிகளில் இருந்து பெற்றதாக கருதப்படும் 40 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்;தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive