Thursday, September 30, 2010

வடகிழக்கில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன் இல்லையாம்.

Thursday, September 30, 2010
வடகிழக்குப் பிரதேசங்களில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன்கள் உரிய முறையில் கிடைக்கவில்லையெனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றுக் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொருளியல் நிபுணர் கலாநிதி சமன் கெலேகம சாட்சியமளிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளும் வலுவற்றதாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலும் அரசாங்கம் செயலிழந்துள்ளது என்றும் அவ்வாறு இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதி அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்றதிகாரம் என்பவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமாக அமையவில்லை எனவும் கலாநிதி சமன் கெலேகம கூறினார்.

இதன்மூலம் போர்நிறுத்தம் செயலிழந்தமையை அவதானிக்கமுடிந்ததாக அவர் ஆணைக்குழுவின் முன்னர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive