Thursday, September 30, 2010

கடவுச் சீட்டைப் பெறுவது சுலபமாகிறது.

Thursday, September 30, 2010
எம்(M) மற்றும் என் (N) தொடரிலான கடவுச் சீட்டு உரிமையாளர்கள் புதிதாகக் கடவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தில் இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

நாளைய தினம் புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது இலகுவானதாகுமென்றும் அதனை உறுதிப்படுத்தத் தரகர்களின் பின்னால் அலையத் தேவையில்லையெனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறினார்.

புதிய விண்ணப்பப் படிவத்தை சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியமில்லை எனவும் விண்ணப்பதாரியின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கையொப்பம் மற்றும் புதிதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன மாத்திரமே போதுமானதாகும்.

எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கும் சுமார் 300 ரூபா வரை தரகர்களினால் அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய விண்ணப்பப் படிவம் ஒரேயொரு தாளில் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றைக் கள்ஞ்சியப்படுத்துவதும் சுலபமாக இருக்குமெனக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive