Thursday, September 30, 2010

கொழும்புக்கு விசேட அதிகாரசபை வேண்டுமென்கிறார் விமல்.

Thursday, September 30, 2010
கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவரவேண்டுமென பொறியியல் சேவை, வீடமைப்பு, மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

கொழும்பில் நேற்று, தேசிய நிர்மாண சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று தனது வெற்றிகளைவிட தோல்விகளுக்கு உரிமைகோரும் நிறுவனமாகக் கொழும்பு மாநகரசபை உள்ளது என்பதைக் கவலையுடன் கூறவேண்டுமென அமைச்சர் சொன்னார்.

"இன்று நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானமெடுக்கும் நிலையில், தலை நகர் தொடர்பாக விசேட தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென நான் கருதுகிறேன்." என அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கூறினார்.

இதன்மூலம் பல வருடங்களாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தீர்வு கிடைக்குமென்றும் வறிய மக்களுக்குச் சிறந்த வீடமைப்புத் திட்டங்களை அல்லது மாடிவீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க முடியுமெனவும் அவர் சொன்னார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive