Monday, November 21, 20112012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றுக்குச் செல்லும் வீதிகளில் ஆயுதம் தரித்த விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தியவன்னா ஓயவில் ரோந்துச் சேவையில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

