Monday, November 21, 2011

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது!

Monday, November 21, 2011
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து 25 மைல் தூரத்தில் உள்ள இந்திய கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது ரோந்து பணியில் வந்த இந்திய கடற்படையினர் இவர்களை கைது செய்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் இவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive