Sunday, October 3, 2010

கிளிநொச்சியில் தமிழ் அரசியல் கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை.


Sunday, October 03, 2010
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என ஸ்ரீ டெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, வடகிழக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட பொதுமக்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பொதுவாக ஒருவர் காணாமல்போகும் பட்சத்தில் அவர் 5வருடங்களில் திரும்பிவராவிட்டால் அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. எனினும் ஜே.வி.பி.யினர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றின் படி இரண்டு வருடங்களில் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் இதுவரையில் மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை இருந்தது.அதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டன.

அத்தோடு வடகிழக்கில் காணி உரிமையற்றவர்கள் குடியேறுதல் தொடர்பிலான தகவல்களை திரட்டி இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆதலால் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது.

ஆனால் யுத்த நிலையின்போது புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

Sunday, October 03, 2010
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் கூட்டத்த்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதனால் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தகளத்தில் நடந்தது என்ன? - அரசு சரியாக வெளிப்படுத்தாததால் புலிகள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் - பேராசிரியர் றொகான் சுட்டிக்காட்டு.

Sunday, October 03, 2010
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச் சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் பேராசிரியர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் என்ன நேர்ந்ததென்பதனை உலகிற்கு அரசாங்கம் சரியான முறையில் வெளிப் படுத்தத் தவறியுள்ளதாகவும் இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து சாதகமான பிரசாரங் களை மேற்கொள்வதற்கு அரசியல் தலை வர்கள் முன்வராமை ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சிவிலியன் இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான தகவல்களை வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றிய மருத்து வர்களுடன் நடத்திய செவ்விகளின் அடிப்படை யில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உச்ச பட்ச மாக ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வரு கிறது அதனை இல்லாதொழிப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட அமெரிக் காவில் மட்டும் 42 புலித் தலைவர் கள் இயங்கி வருகின்றனர். புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி யது. சர்வதேச வலையமைப்பை முடக்குவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நெடியவன் இன்னமும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான பிரசாரங்களை மேற் கொண்டுவருகிறார்.இதேவேளை இலங்கையில் நிரந்தர சமா தானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியம்.இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இலங்கை விஜயம்!

Sunday, October 03, 2010
சீனாவின் என்.ஐ.சீ.எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் கரடிய னாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமற் கொள்கலன் வெடிப்பு சம்ப வம் தொடர்பில் சந்தேகம் வெளியிட் டுள்ள நிலையில் அது குறித்து நாடளா வியரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் இப் புலனாய்வுக் குழு வினர் ஆராயவுள்ளனர் என சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை கரடியனாறு வெடிப்புச் சம்பவம் குறித்து ஏற்கெனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது.

Followers

Blog Archive