Sunday, October 3, 2010

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

Sunday, October 03, 2010
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் கூட்டத்த்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதனால் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive