Sunday, October 3, 2010

யுத்தகளத்தில் நடந்தது என்ன? - அரசு சரியாக வெளிப்படுத்தாததால் புலிகள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் - பேராசிரியர் றொகான் சுட்டிக்காட்டு.

Sunday, October 03, 2010
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச் சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் பேராசிரியர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் என்ன நேர்ந்ததென்பதனை உலகிற்கு அரசாங்கம் சரியான முறையில் வெளிப் படுத்தத் தவறியுள்ளதாகவும் இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து சாதகமான பிரசாரங் களை மேற்கொள்வதற்கு அரசியல் தலை வர்கள் முன்வராமை ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சிவிலியன் இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான தகவல்களை வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றிய மருத்து வர்களுடன் நடத்திய செவ்விகளின் அடிப்படை யில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உச்ச பட்ச மாக ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வரு கிறது அதனை இல்லாதொழிப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட அமெரிக் காவில் மட்டும் 42 புலித் தலைவர் கள் இயங்கி வருகின்றனர். புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி யது. சர்வதேச வலையமைப்பை முடக்குவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நெடியவன் இன்னமும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான பிரசாரங்களை மேற் கொண்டுவருகிறார்.இதேவேளை இலங்கையில் நிரந்தர சமா தானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியம்.இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive