Tuesday, June 15, 2010

கொழும்பில் தற்காலிக போக்குவரத்துத் திட்டம்.

Tuesday, 15 June 2010

இராணுவ வெற்றியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிவகுப்பு ஒத்திகைக்காக தற்காலிக போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு காலிமுகத் திடல் சந்தியிலிருந்து செரமிக் சந்தி வரையிலான பகுதி இக்காலப் பகுதியில் போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்படவுள்ளதெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பாகக் காலி வீதியூடாகக் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சகல பார ஊர்திகளும் கொள்ளுப்பிட்டிச் சந்தியால் திரும்பிப் பித்தளைச் சந்தியால் கொழும்பு நோக்கிப் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தின் வலப்புறமாக மாக்கான் மாக்கார் மாவத்தையூடாகத் திரும்பிக் கொம்பனித் தெரு ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கமுடியும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive