Friday, 11 June 2010
சிலாபம் நகரை அண்மித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாகப் பொலிசார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.
நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பில் இச்சிறுவர் இல்லம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
14 முதல் 16 வயது வரையிலான சிறுமியரே இவ்வாறு விபசார நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வெளியேறிய இவர்கள் வீடொன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சிறுமிகளில் இருவர் சிலாபத்திலும் ஒருவர் காலியிலும், நான்காமவர் நவகத்தேகமவிலும் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை அழைத்துச் சென்ற நீர்கொழும்பு, கதிரான பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கிடைத்த தகவலொன்றுக்கமைய பொலிசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சிலாபம் நகரை அண்மித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாகப் பொலிசார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.
நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பில் இச்சிறுவர் இல்லம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
14 முதல் 16 வயது வரையிலான சிறுமியரே இவ்வாறு விபசார நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வெளியேறிய இவர்கள் வீடொன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சிறுமிகளில் இருவர் சிலாபத்திலும் ஒருவர் காலியிலும், நான்காமவர் நவகத்தேகமவிலும் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை அழைத்துச் சென்ற நீர்கொழும்பு, கதிரான பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கிடைத்த தகவலொன்றுக்கமைய பொலிசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment