Friday, June 11, 2010

புலிகள் சார்பு வலையமைப்புக்கள் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சி!

Friday, 11 June 2010
புணானையில் படைவீரர் மத்தியில் பாதுகாப்பு செயலர்

சர்வதேச மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற புலிகள் சார்பு பயங்கரவாத வலையமைப்புக்கள் இலங்கையில் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புலிகள் சார்பு சர்வதேச வலையமைப்புக்களின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை புலனாய்வூத் துறையினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர்இ இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் கவன யீனமாக இருக்க முடியாதென்றும் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைத்து அதனை மேலும் வளப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

வெலிகந்தைஇ புணானையிலுள்ள இராணுவத்தின் 23வது படையணியின் தலைமையகத்துக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த நான்காயிரத்து க்கு மேற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு புலி களின் சர்வதேச மட்ட நிதித் தொடர்புகள்இ ஆயூதத் தொடர்புகள் போன்ற பாரிய வலையமைப்புக்கள் உள்நாட்டு புலனாய்வூத் துறையின ராலும் வெளிநாடுகளின் ஒத்துழைப் புடனும் முடக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒரு சில வலையமைப் புக்கள் தொடர்ந்தும் சர்வதேசமட்ட த்தில் செயற்பட்டு வருவதாகவூம் தெரி வித்தாh;. அதன் அழுத்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவ தில்லை. ஒரு யூகத்தைக் கடந்து புதியதொரு யூகத்தில் நாம் காலடி வைத்துள்ளோம்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நாம் தவற விடக்கூடாது. அப்பாவி பொதுமக் களைப் பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்ற வெற்றியை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆரம்பக் கட்ட த்தை எமது எதிர்கால படிப்பினை யாக கொள்ளவேண்டும். அப்போது தான் எதிர்காலங்களிலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாது செயற்பட முடியூம்.

இவ்வாறான பயங்கரவாதத்தின் அடித்தளம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் கிளம்புவதற்கு இடமளிக்கக் கூடா தென்றும் இதற்கமைவாக நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத் தப்பட்டு அங்குள்ள பாடசாலைக ளிலும் கட்டடங்களி லும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பதிலாக வடக்குஇ கிழக்கில் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர முகாம்கள் அமைத்து சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படு மென்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive