Saturday, May 29, 2010

மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் பணிப்பு

Saturday, May 29, 2010

வடக்குக் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள இடங்கள் வழமையான நிலைக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும். அதற்காக குறித்த பகுதிகளுக்கான மீள்கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக்க வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி யின் தலைவர் ஹருகிகோ குருடா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற் கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங் களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இவ்வருடம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive