Saturday, May 29, 2010

நிவாரணக் கிராமங்களை மூடப் பணிப்பு ,

Saturday, May 29, 2010
வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இடம்பெயந்த சுமார் 3 லட்சம் மக்கள் வடபகுதியில் ஏற்கனவே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் சொந்த இடங்களின் உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னரே அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படியில், மீள் குடியேற்ற நடவடிக்கைகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறக் குறைய 4,500 பேர் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகிறது.
இதே வேளை மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive