Saturday, May 29, 2010

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்! - அகதி அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தல் ?

Saturday, May 29, 2010
அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர் மலேசியாவின் தடுப்பு முகாமில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து 61 பேர் உணவு உண்ண மறுத்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் அரசியல் அகதிகள் என்று ஏற்றுக் கொள்வதோடு சர்வதேச உரிமைகளுக்கான அமைப்புக்களைத் தொடர்பு கொள்ள வழிஏற்படும் வரை உண்ணாவிரதத் தைக் கைவிடப் போவதில்லை என்று தெரி வித்துள்ளனர் என மலேசிய மனித உரிமை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த நளினி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பின்னர் எவ்வாறு படகிலிருந்து இறங்கினார்கள்? அவர்களுக்கு ஏதாவது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவரவில்லை. இந்தோனே ´யக் கடலில் கடந்த ஒரு சில நாள்களுக்கு முன் கைதான 26 இளைஞர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளி யாகவில்லை.
இந்தோனே´யாவின் மத்தியயாவா மாகாணத்திலிருந்து தென்கிழக்கில் அமைந் துள்ள இந்து சமுத்திரத்தில் 26ற்கும் மேற் பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய படகு என நம்பப்படும் படகொன்று தரித்து நின்ற தாக இந்தோனே´யத் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்தோனே´ய மீனவர்கள் இந்த இலங் கை அகதிப் படகை இனம் கண்டனர். இந்தப் படகு இலங்கை அகதிகளை ஏற்றி வரும் படகாக இருக்கலாம் என இந்தோனே´ய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.அகதிகள், அதிகாரிகள் ஊடாக தமக்கு உதவுமாறு மீனவர்களிடம் கோரிக் கை விடுத்துள்ள தாக இந்தோனே ´யக் கடலோரக் காவல் படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive