Thursday, April 22, 2010

ருக்மன் ஐதேகவிலிருந்து விலகுவது குறித்து அறிவிக்கப்படவில்லை : திஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
.தே.கவின் தேசியப்பட்டியலில் ருக்மன் சேனாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படாததையடுத்து அவர் பதவி விலகவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பாக பேசப்படுகின்ற போதிலும் உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமைத்துவத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்றார்.
.தே.கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவலின்படி ருக்மன் சேனாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Followers

Blog Archive