Friday, April 16, 2010

FRIDAY, APRIL 16, 2010
ஏழாவது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே ஜனாதிபதி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்th தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி கலந்துரையாடவிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive