Wednesday, April 21, 2010

WEDNESDAY, APRIL 21, 2010
திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி 20,578 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சற்றுநேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட முடிவின்படி திருகோணமலைத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,961 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8,718 வாக்குகளையும் பெற்றுள்ளன.

திருகோணமலைத் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,784 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 39,691 வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 33,268 வாக்குகளையும்பெற்றுள்ளன.

இதற்கிணங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது..

No comments:

Post a Comment

Followers

Blog Archive