Tuesday, October 5, 2010

அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதிக்கு வாய்ப்பென்கிறார் றொபேர்ட் ஓ பிளேக்.

Tuesday, October 5, 2010
இலங்கையில் பல்வேறு இனங்களிடையே ஜனநாயத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குக் கிடைத்துள்ளதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூர பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றைத் தோற்கடித்துள்ளதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் வளமான அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கைகள் குறித்து சன்டியாகோவில் நடைபெற்ற உலக விவகாரங்கள் தொடர்பான உரையின்போதே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மோதல்கள் அற்றதும் காத்திரமான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டதாக இலங்கையின் எதிர்காலம் அமையவுள்ளதாக கொழும்பிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive