Tuesday, October 5, 2010

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழப்பு.

Tuesday, October 5, 2010
காலநிலை காரணமாக இதுவரை பத்துப்பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

உயிரிழந்தோரில் 6 பேர் மின்னல் தாக்கத்தினால் பலியானதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இவர்களைத் தவிர மேலும் ஆறுபேர் இயற்கை அனர்த்தங்களால் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் சொன்னார்.

மழைவெள்ளம் காரணமாக முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்தோருக்கு இழப்பீடுகள் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 30 வீடுகள் முற்றாகவும் 84 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive