Tuesday, October 5, 2010
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆரம்பமான வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி 'மெட்றாஸ் மெயில் அரங்கில்' பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவை முன்னிட்டு கிளிநொச்சி பிரதான நகரிலிருந்து பண்பாட்டுப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வடமாகாண ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் கௌரவ ஆளுநர் விருது என்பவை வழங்கல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்பவை இடம்பெறவுள்ள இவ்விழாவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆரம்பமான வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி 'மெட்றாஸ் மெயில் அரங்கில்' பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவை முன்னிட்டு கிளிநொச்சி பிரதான நகரிலிருந்து பண்பாட்டுப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வடமாகாண ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் கௌரவ ஆளுநர் விருது என்பவை வழங்கல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்பவை இடம்பெறவுள்ள இவ்விழாவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment