Tuesday, December 28, 2010

235 பிக்பொக்கட் திருடர்கள் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு சார்க் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் உட்பட முக்கிய கேடிகள் கைது!

Tuesday, December 28, 2010
பண்டிகைக் காலத்தில் திருடர்களின் கைவரிசையும் அதிகரித்துள்ளது. இக்காலப் பகுதியில் 235 ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவங்களை வழிநடத்தும் 6 பேரும், திருட்டில் ஈடுபடும் 229 பேரும் கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு பெருந்தொகையான ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒருவரும் உள்ளடங்குவதாகவும், ஹெரோயின் போதைவஸ்துக்கு அடிமையான அவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 20 நாடோடி (ஜிப்சீஸ்) ஆண், பெண்களும் ‘உள்ளடங்குகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளையும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பழக்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘பிக்பொக்கட்’ திருடர்களை அவர்களின் உடைநடை, பாவனைகளைக் கொண்டு அடையாளம் காணமுடியாது. மக்களுடன் மக்களாக இணைந்து சென்றே திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சில தனியார் பஸ் நடத்துனர்களும் இவ்வாறான திருட்டுகளுக்கு உதவுகின்றனர். இதில் அவர்களுக்கும் பங்குகள் வழங்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுக் கும்பல்களின் தலைவர்களான வையா, சுதா, கிரா, மெகா, சாமீ, யுந்தா ஆகியோரே டிசம்பர் 3ம் திகதி முதல் நடத்தப்பட்ட விசேட தேடுதல்களில் பொலிஸா¡ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவர்களின் பணிப்புரைக்கமைய இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive