Monday, November 15, 2010

சுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய!

Monday, November 15, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொpவித்தார்.
இந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளா;களுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது.

நாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

அடுத்து வரும் நாட்களில் பிரதமா; டி.எம்.ஜயரத்ன அமைச்சா;களான மைத்திhpபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர்; பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive