Friday, November 5, 2010
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் பட்டியலொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தயாரித்து வருவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்தப் பட்டியல் விரைவில் தமக்கு வழங்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டவர்களும் படையினரிடம் சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓமந்தை தடுப்பு முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, அவர்களின் விடுதலை, சட்ட நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பெயர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியலையும் வழங்கியிருந்தார். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான பட்டியலொன்றைத் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தயாரித்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் பட்டியலொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தயாரித்து வருவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்தப் பட்டியல் விரைவில் தமக்கு வழங்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டவர்களும் படையினரிடம் சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓமந்தை தடுப்பு முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, அவர்களின் விடுதலை, சட்ட நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பெயர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியலையும் வழங்கியிருந்தார். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான பட்டியலொன்றைத் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தயாரித்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
No comments:
Post a Comment