Thursday, November 18, 2010

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும் நிகழ்வு!

Thursday, November 18, 2010
அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர்களான தயாசிரி திசேரா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினம் ஆகையால் வடக்கிலிருந்து வருகை தரும் மக்கள் மாகம்புர துறைமுக வளாகத்தில் ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த் துக்களையும் வடக்கினை மீட்டு தந்தமை க்காக நன்றியினையும் தெரிவிக்க வுள்ளனர்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமி டக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive