Saturday, July 31, 2010

இலங்கையில் ‘ரூனா’ டின்மீன் தொழிற்சாலை.

Saturday, July 31, 2010
மாலைதீவூ ரூனா’ டின்மீன் தொழிற்சாலை யொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த மாலைதீவூ மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் ஷுஹஸைன் ரசீட் ஹசன்இ மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவூடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டது.

மாலைதீவிலுள்ள மூன்று பிரதான டின் மீன் கம்பனிகளில் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதன் படிஇ மாலைதீவூ அரசின் ஒத்துழைப்புடன் ரூனா டின் மீன் கம்பனி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

சார்க் நாட்டு மீன்பிடி அமைச்சர்கள் பேச்சு நடத்தி வலய கடற் பரப்பில் மீன் வளத்தை முகாமைத்துவம் செய்யவூம் மீன் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

மேலைத்தேய நாட்டு மீனவர்கள் எமது கடற் பிராந்தியத்தில் சட்ட விரோதமான முறைகளில் மீன் பிடிப்பதை தடுக்க வலய நாடுகள் இணைந்து செயற் பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள நாரா நிறுவனத்தினூடாக மாலைதீவூ மீன்பிடித்துறை சார் ஆய்வூகளில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்ப்பதாக மாலைதீவூ அமைச்சர் கூறினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive