Saturday, July 17, 2010

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே.

Saturday, July 17, 2010
இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கலந்தாலோசித்திருக்கிறார்கள்.

திருப்பியழைக்கப்பட்ட நீல் புஹ்னே எதற்காக மீண்டும் இலங்கைக்கு செல்கிறார் என பேச்சாளரிடம் கேட்டபோது… இலங்கையில் இப்பொழுது அரசாங்கத்தின் சாதகமானநிலை தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே புஹ்னே மீண்டும் இலங்கை செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive