Wednesday, July 14, 2010

பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும்,

Wednesday, July 14, 2010
அரசியல் பேதங்களை புறந்தள்ளிவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக சேவையாற்ற முன்வருமாறு அரசாங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி படைத்தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அரச ஊழியாகளைச் சந்தித்து உரையாடியபோதே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் :-

உங்கள் மத்தியில் பலவித அரசியல் பேதங்கள் இருக்கலாம். விடுவிக்கப்பட்டுள்ள இந்த பூமியை மீளக் கட்டியெழுப்புவதற்காக நீங்கள் அரசியல் பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்க ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானதாகும் என்று ஜனாதிபதி கூறினார்.

அரசாங்க ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி தமிழ் மொழிலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive