Thursday, June 10, 2010
சிலாபம் ஆராச்சிக்கட்டுவப் பகுதியில் இந்திய வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேசத்தில் தும்பு சார்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இந்திய வர்த்தகரைக் கடத்திச்சென்று தாக்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே பொலிசார் இவர்களைக் கைது செய்தனர்.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த வர்த்தகரை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடத்திச்சென்று தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.
ஊழியர் பிரச்சனையை மையமாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்திய வர்த்தகர் ஆராச்சிக்கட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகப் பொலிசார் கூறினர்.
சிலாபம் ஆராச்சிக்கட்டுவப் பகுதியில் இந்திய வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேசத்தில் தும்பு சார்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இந்திய வர்த்தகரைக் கடத்திச்சென்று தாக்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே பொலிசார் இவர்களைக் கைது செய்தனர்.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த வர்த்தகரை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடத்திச்சென்று தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.
ஊழியர் பிரச்சனையை மையமாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்திய வர்த்தகர் ஆராச்சிக்கட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகப் பொலிசார் கூறினர்.
No comments:
Post a Comment