Monday, January 24, 2011

தேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம்.

Monday, January 24, 2011
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான பiர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார்.

அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive