Wednesday, January 12, 2011

இலங்கை விமானப்படையின் காற்றாடி விமானங்கள்(Helicopters) அனர்த்த நிவாரனப்பணிகளில்.

Wednesday, January 12, 2011
இலங்கை விமானப்படையின் 'பெல்212' காற்றாடி விமானம் மூலம் மட்டக்களப்பில்
வெள்ளத்தினால் சிக்குண்ட 54 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் இவர்களில் 32 நபர்கள் தம்பிடிய பிரதேசத்தையும்,ஏனையோர் போகம்யாய, ரம்புக்கன் ஒய,வாழைச்சேனை போன்ற
பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அதேநேரம் விமானப்படையின்' எம்.ஐ.17' எனும் காற்றாடி விமானம் மூலம் தொப்பிகல பிரதேசத்திற்கு இன்று காலை ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதுடன்,மேலும் 'பெல் 212' காற்றாடி விமானம் மூலம் கற்பினித்தாயொறுவர் வாழச்சேனையில் இருந்து பொலந்நறுவைவைத்தியச்சாலைக்கு
அழைத்துச்செல்லப்பட்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.இப்பணியானது நேற்று மதியம்
தொடக்கம் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் பல நிவாரணப்பணிகளை
மேற்கொள்ள விமானப்படையானது தயார்நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க
விடயமாகும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive