Wednesday, June 9, 2010

அமைச்சர் றிசாத் பதியுதீனைச் சந்தித்தார் வியட்நாம் பிரதி அமைச்சர்.

Wednesday, 09 June 2010
கைத்தொளில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, வியட்நாம் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதி அமைச்சர் டொன் லீ குஆங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேற்படி அமைச்சில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலையடுத்து தமது நாடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக பிரதி அமைச்சர் டொன் லீ குஆங், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறையில் இலங்கை, வியட்நாம் இருதரப்பு நாடுகளினதும் உறவை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் செயல்படுவது வரவேற்கக் கூடியதாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வியட்நாம் தனது முதலீடுகளை செய்வதைத் தாம் பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive