Monday, May 24, 2010

கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள்

May 24, 2010
கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வீதமான சிறைக் கைதிகள் நகர அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான காலநிலையினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாகும் என நகர நிர்வாகி ஒமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive